Thirukkuralagam
Kural 1069 of 1330

இரவுள்ள உள்ளம் உருகும் கரவுள்ள உள்ளதூஉம் இன்றிக் கெடும்.

Iravulla Ullam Urukum Karavulla Ulladhooum Indrik Ketum

The heart will melt away at thought of beggary,With thought of stern repulse 'twill perish utterly

விளக்கம் — மு. வரதராசன்

இரத்தலின் கொடுமையை நினைத்தால் உள்ளம் கரைந்து உருகும், உள்ளதை ஒழிக்கும் கொடுமையை நினைத்தால் உருகுமளவும் இல்லாமல் அழியும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பிறரிடம் போய்ப் பிச்சை ஏற்று நிற்கும் கொடுமையை எண்ணினால் என் உள்ளம் உருகும். இக்கொடுமையைப் பார்த்த பிறகும் இல்லை என்று மறைப்பவர் கொடுமையை எண்ணினால் உருகும் உள்ளமும் இல்லாது அழிந்துவிடும்.

விளக்கம் — கலைஞர்

இரந்து வாழ்வோர் நிலையை நினைக்கும் போது உள்ளம் உருகுகிறது, இருப்பதைக் கொடுக்க மனமின்றி மறைத்து வாழ்பவரை நினைத்தால் உருகிடவும் வழியின்றி உள்ளமே ஒழிந்து விடுகிறது

Meaning (English)

To think of (the evil of) begging is enough to melt one’s heart; but to think of refusal is enough to break it.

Open the interactive app →