Thirukkuralagam
Kural 1070 of 1330

கரப்பவர்க்கு யாங்கொளிக்கும் கொல்லோ இரப்பவர் சொல்லாடப் போஒம் உயிர்.

Karappavarkku Yaangolikkum Kollo Irappavar Sollaatap Poom Uyir

E'en as he asks, the shamefaced asker dies; Where shall his spirit hide who help denies

விளக்கம் — மு. வரதராசன்

இரப்பவர் இல்லை என்று சொல்கின்ற அளவிலேயே உயிர் போகின்றதே, உள்ளதை இல்லை என்று ஒளிப்பவர்க்கு உயிர் எங்கு ஒளிந்திருக்குமோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இல்லை என்று சொல்வதைக் கேட்ட உடனே பிச்சை எடுப்பவரிடமிருந்து போய் விடும் உயிர், இல்லை என்று சொல்பவர்க்கு மட்டும் போகாமல் எங்கே போய் ஒளிந்து கொள்கிறது?

விளக்கம் — கலைஞர்

இருப்பதை ஒளித்துக்கொண்டு `இல்லை' என்பவர்களின் சொல்லைக் கேட்டவுடன், இரப்போரின் உயிரே போய் விடுகிறதே; அப்படிச் சொல்பவர்களின் உயிர் மட்டும் எங்கே ஒளிந்துகொண்டு இருக்குமோ?

Meaning (English)

Saying “No” to a beggar takes away his life. (but as that very word will kill the refuser) where then would the latter’s life hide itself ?

Open the interactive app →