Thirukkuralagam
Kural 1074 of 1330

அகப்பட்டி ஆவாரைக் காணின் அவர஧ன் மிகப்பட்டுச் செம்மாக்கும் கீழ்.

Akappatti Aavaaraik Kaanin Avarin Mikappattuch Chemmaakkum Keezh

When base men those behold of conduct vile,They straight surpass them, and exulting smile

விளக்கம் — மு. வரதராசன்

கீழ் மக்கள் தமக்கு கீழ் பட்டவராய் நடப்பவரைக் கண்டால், அவரை விடத் தாம் மேம்பாடு உடையவராய் இறுமாப்படைவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தனக்கும் கீழாகத் தான் விரும்பியபடி எல்லாம் வாழும் நாய் போன்றவரைக் கண்டால் அவரைக் காட்டிலும் மேலாகத் தன் நிலையைக் காட்டி கயமை, இறுமாப்புக் கொள்ளும்.

விளக்கம் — கலைஞர்

பண்பாடு இல்லாத கயவர்கள், தம்மைக் காட்டிலும் இழிவான குணமுடையோரைக் கண்டால், அவர்களைவிடத் தாம் சிறந்தவர்கள் என்ற கர்வம் கொள்வார்கள்

Meaning (English)

The base feels proud when he sees persons whose acts meaner than his own.

Open the interactive app →