Thirukkuralagam
Kural 1088 of 1330

ஒண்ணுதற் கோஒ உடைந்ததே ஞாட்பினுள் நண்ணாரும் உட்குமென் பீடு.

Onnudhar Koo Utaindhadhe Gnaatpinul Nannaarum Utkumen Peetu

Ah woe is me my might, That awed my foemen in the fight,By lustre of that beaming brow Borne down, lies broken now

விளக்கம் — மு. வரதராசன்

போர்க்களத்தில் பகைவரும் அஞ்சுதற்க்கு காரணமான என் வலிமை, இவளுடைய ஒளி பொருந்திய நெற்றிக்குத் தோற்று அழிந்ததே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

களத்தில் முன்பு என்னை அறியாதவரும் அறிந்தவர் சொல்லக் கேட்டு வியக்கும் என் திறம், அவள் ஒளி பொருந்திய நெற்றியைக் கண்ட அளவில் அழிந்துவிட்டதே.

விளக்கம் — கலைஞர்

களத்தில் பகைவரைக் கலங்கவைக்கும் என் வலிமை இதோ இந்தக் காதலியின் ஒளி பொருந்திய நெற்றிக்கு வளைந்து கொடுத்துவிட்டதே!

Meaning (English)

On her bright brow alone is destroyed even that power of mine that used to terrify the most fearless foes in the battlefield.

Open the interactive app →