Thirukkuralagam
Kural 1089 of 1330

பிணையேர் மடநோக்கும் நாணும் உடையாட்கு அணியெவனோ ஏதில தந்து.

Pinaiyer Matanokkum Naanum Utaiyaatku Aniyevano Edhila Thandhu

Like tender fawn's her eye; Clothed on is she with modesty; What added beauty can be lent; By alien ornament

விளக்கம் — மு. வரதராசன்

பெண்மானைப் போன்ற இளமைப் பார்வையும் நாணமும் உடைய இவளுக்கு, ஒரு தொடர்பும் இல்லாத அணிகளைச் செய்து அணிவது ஏனோ.

விளக்கம் — சாலமன் பாப்பையா

பெண்மானைப் போன்ற அச்சப் பார்வையையும் உள்ளத்தில் நாணத்தையும் நகைகளாகக் கொண்டிருக்கும் இவளுக்கு வேறு வேறு வகைப்பட்ட நகைகளை அணிவித்திருப்பது எதற்காகவோ?

விளக்கம் — கலைஞர்

பெண்மானைப் போன்ற இளமை துள்ளும் பார்வையையும், நாணத்தையும் இயற்கையாகவே அணிகலன்களாகக் கொண்ட இப்பேரழகிக்குச் செயற்கையான அணிகலன்கள் எதற்காக?

Meaning (English)

Of what use are other jewels to her who is adorned with modesty, and the meek looks of a hind ?

Open the interactive app →