Thirukkuralagam
Kural 1095 of 1330

குறிக்கொண்டு நோக்காமை அல்லால் ஒருகண் சிறக்கணித்தாள் போல நகும்

Kurikkontu Nokkaamai Allaal Orukan Sirakkaniththaal Pola Nakum

She seemed to see me not; but yet the maidHer love, by smiling side-long glance, betrayed

விளக்கம் — மு. வரதராசன்

என்னை நேராகக் குறித்துப் பார்க்காத அத் தன்மையே அல்லாமல், ஒரு கண்ணைச் சுருக்கினவள் போல் என்னைப் பார்த்து தனக்குள் மகிழ்வாள்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நேரே பார்க்காமல் ஒரு கண்ணை மட்டும் சுருக்கி பார்ப்பவள் போல என்னைப் பார்த்துப் பார்த்துப் பிறகு தனக்குள் தானே மகிழ்வாள்.

விளக்கம் — கலைஞர்

அவள் என்னை நேராக உற்றுப் பார்க்கவில்லையே தவிர, ஒரு கண்ணைச் சுருக்கி வைத்துக் கொண்டதைப் போல என்னை நோக்கியவாறு தனக்குள் மகிழ்கிறாள்

Meaning (English)

She not only avoids a direct look at me, but looks as it were with a half-closed eye and smiles.

Open the interactive app →