Thirukkuralagam
Kural 1096 of 1330

உறாஅ தவர்போல் சொலினும் செறாஅர்சொல் ஒல்லை உணரப் படும்.

Uraaa Thavarpol Solinum Seraaarsol Ollai Unarap Patum

Though with their lips affection they disown,Yet, when they hate us not, 'tis quickly known

விளக்கம் — மு. வரதராசன்

புறத்தே அயலார் போல் அன்பில்லாத சொற்களைச் சொன்னாலும், அகத்தே பகையில்லாதவரின் சொல் என்பது விரைவில் அறியப்படும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

(பேசினேன்) அவள் யாரே எவரோ என்று பதில் சொன்னாள்; சொன்னாலும், மனத்தில் பகை இல்லாத அவளது சொல்லின் பொருள் விரைவில் அறியப்படும்.

விளக்கம் — கலைஞர்

காதலை மறைத்துக் கொண்டு, புறத்தில் அயலார் போலக் கடுமொழி கூறினாலும், அவள் அகத்தில் கோபமின்றி அன்பு கொண்டிருப்பது விரைவில் வெளிப்பட்டுவிடும்

Meaning (English)

Though they may speak harshly as if they were strangers, the words of the friendly are soon understood.

Open the interactive app →