Thirukkuralagam
Kural 1105 of 1330

வேட் ட பொழுதின் அவையவை போலுமே தோட் டார் கதுப்பினாள் தோள்.

Vetta Pozhudhin Avaiyavai Polume Thottaar Kadhuppinaal Thol

In her embrace, whose locks with flowery wreaths are bound,Each varied form of joy the soul can wish is found

விளக்கம் — மு. வரதராசன்

மலரணிந்த கூந்தலை உடைய இவளுடைய தோள்கள் விருப்பமான பொருள்களை நினைத்து விரும்பிய பொழுது அவ்வப் பொருள்களைப் போலவே இன்பம் செய்கின்றன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நாம் விரும்பும் பொருள்கள் விரும்பியபொழுது விரும்பியவாறே இன்பம் தருவது போல, பூச்சூடிய கூந்தலை உடைய இவள் தோள்கள் இவளுடன் எப்போது கூடினாலும் இன்பம் தருகின்றன.

விளக்கம் — கலைஞர்

விருப்பமான பொருள் ஒன்று, விரும்பிய பொழுதெல்லாம் வந்து இன்பம் வழங்கினால் எப்படியிருக்குமோ அதைப் போலவே பூ முடித்த பூவையின் தோள்கள் இன்பம் வழங்குகின்றன

Meaning (English)

The shoulders of her whose locks are adorned with flowers delight me as if they were the very sweets I have desired (to get).

Open the interactive app →