Thirukkuralagam
Kural 1106 of 1330

உறுதோறு உயிர்தளிர்ப்பத் தீண்டலால் பேதைக்கு அமிழ்தின் இயன்றன தோள்.

Urudhoru Uyirdhalirppath Theentalaal Pedhaikku Amizhdhin Iyandrana Thol

Ambrosia are the simple maiden's arms; when I attainTheir touch, my withered life puts forth its buds again

விளக்கம் — மு. வரதராசன்

பொருந்து போதெல்லாம் உயிர் தளிர்க்கும் படியாகத் தீண்டுதலால் இவளுக்கு தோள்கள் அமிழ்தத்தால் செய்யப்பட்டிருக்க வேண்டும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இவளை அணைக்கும்போது எல்லாம் வாடிக் கிடந்த என் உயிர் தளிர்க்கும்படி என்னைத் தொடுவதால், இவளின் தோள்கள் அமிழ்தத்தில் செய்யப்பட்டவை போலும்.

விளக்கம் — கலைஞர்

இந்த இளமங்கையைத் தழுவும் போதெல்லாம் நான் புத்துயிர் பெறுவதற்கு இவளின் அழகிய தோள்கள் அமிழ்தத்தினால் ஆனவை என்பதுதான் காரணம் போலும்

Meaning (English)

The shoulders of this fair one are made of ambrosia, for they revive me with pleasure every time I embrace them.

Open the interactive app →