Thirukkuralagam
Kural 1124 of 1330

வாழ்தல் உயிர்க்கன்னள் ஆயிழை சாதல் அதற்கன்னள் நீங்கும் இடத்து.

Vaazhdhal Uyirkkannal Aayizhai Saadhal Adharkannal Neengum Itaththu

Life is she to my very soul when she draws nigh; Dissevered from the maid with jewels rare, I die

விளக்கம் — மு. வரதராசன்

ஆராய்ந்து அணிகலன்களை அணிந்த இவள் கூடும் போது உயிர்க்கு வாழ்வு போன்றவள், பிரியும் போது உயிர்க்கு சாவு போன்றவள்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் மனைவி, நான் அவளுடன் கூடும்போது உயிருக்கு உடம்பு போன்றிருக்கிறாள். அவளைப் பிரியும்போது உயிர் உடம்பை விட்டுப் பிரிவது போன்றிருக்கிறாள்.

விளக்கம் — கலைஞர்

ஆய்ந்து தேர்ந்த அரிய பண்புகளையே அணிகலனாய்ப் பூண்ட ஆயிழை என்னோடு கூடும்போது, உயிர் உடலோடு கூடுவது போலவும், அவள் என்னைவிட்டு நீங்கும்போது என்னுயிர் நீங்குவது போலவும் உணருகிறேன்

Meaning (English)

My fair-jewelled one resembles the living soul (when she is in union with me), the dying soul when she leaves me.

Open the interactive app →