Thirukkuralagam
Kural 1132 of 1330

நோனா உடம்பும் உயிரும் மடலேறும் நாணினை நீக்கி நிறுத்து.

Nonaa Utampum Uyirum Matalerum Naaninai Neekki Niruththu

My body and my soul, that can no more endure,Will lay reserve aside, and mount the 'horse of palm'

விளக்கம் — மு. வரதராசன்

(காதலின் பிரிவால் ஆகிய துன்பத்தைப்) பொறுக்காத என் உடம்பும் உயிரும், நாணத்தை நீக்கி நிறுத்தி விட்டு மடலூரத் துணிந்தன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

காதலை நிறைவேற்ற முடியாது வருந்தும் இந்த உடலும் உயிரும் வெட்கத்தை விட்டுவிட்டு மடல் ஏற எண்ணுகின்றன.

விளக்கம் — கலைஞர்

எனது உயிரும், உடலும் காதலியின் பிரிவைத் தாங்க முடியாமல் தவிப்பதால், நாணத்தைப் புறந்தள்ளிவிட்டு மடலூர்வதற்குத் துணிந்து விட்டேன்

Meaning (English)

Having got rid of shame, the sufering body and soul save themselves on the palm yra horse.

Open the interactive app →