Thirukkuralagam
Kural 1138 of 1330

நிறையரியர் மன்அளியர் என்னாது காமம் மறையிறந்து மன்று படும்.

Niraiyariyar Manaliyar Ennaadhu Kaamam Maraiyirandhu Mandru Patum

In virtue hard to move, yet very tender, too, are we; Love deems not so, would rend the veil, and court publicity

விளக்கம் — மு. வரதராசன்

இவர் நெஞ்சை நிறுத்தும் நிறை இல்லாதவர், மிகவும் இரங்கத்தக்கவர் என்று கருதாமல் காமம் மறைந்திருத்தலைக் கடந்து மன்றத்திலும் வெளிப்படுகின்றதே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இவள் மன அடக்கம் மிக்கவள்; பெரிதும் இரக்கப்பட வேண்டியவள் என்று எண்ணாமல் இந்த காதல் எங்களுக்குள் இருக்கும் இரகசியத்தைக் கடந்து ஊருக்குள்ளேயும் தெரியப்போகிறது.

விளக்கம் — கலைஞர்

பாவம்; இவர், மனத்தில் உள்ளதை ஒளிக்கத் தெரியாதவர்; பரிதாபத்திற்குரியவர்; என்றெல்லாம் பார்க்காமல், ஊர் அறிய வெளிப்பட்டு விடக்கூடியது காதல்

Meaning (English)

Even the Lust (of women) transgresses its secrecy and appears in public, forgetting that they are too chaste and liberal (to be overcome by it).

Open the interactive app →