Thirukkuralagam
Kural 1139 of 1330

அறிகிலார் எல்லாரும் என்றேஎன் காமம் மறுகின் மறுகும் மருண்டு.

Arikilaar Ellaarum Endreen Kaamam Marukin Marukum Maruntu

'There's no one knows my heart,' so says my love,And thus, in public ways, perturbed will rove

விளக்கம் — மு. வரதராசன்

அமைதியாய் இருந்ததால் எல்லோரும் அறியவில்லை என்று கருதி என்னுடைய காமம் தெருவில் பரவி மயங்கிச் சுழல்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் காதல் எனது மன அடக்கத்தால் எல்லாருக்கம் தெரியவில்லை என்று எண்ணி அதைத் தெரிவிக்க தெருவெங்கும் தானே அம்பலும் அலருமாய்ச் சுற்றிச் சுற்றி வருகிறது.

விளக்கம் — கலைஞர்

என்னைத் தவிர யாரும் அறியவில்லை என்பதற்காக என் காதல் தெருவில் பரவி மயங்கித் திரிகின்றது போலும்!

Meaning (English)

My lust, feeling that it is not known by all, reels confused in the streets (of this town).

Open the interactive app →