Thirukkuralagam
Kural 1146 of 1330

கண்டது மன்னும் ஒருநாள் அலர்மன்னும் திங்களைப் பாம்புகொண் டற்று.

Kantadhu Mannum Orunaal Alarmannum Thingalaip Paampukon Tatru

I saw him but one single day: rumour spreads soonAs darkness, when the dragon seizes on the moon

விளக்கம் — மு. வரதராசன்

காதலரைக் கண்டது ஒருநாள் தான், அதனால் உண்டாகிய அலரோ, திங்களைப் பாம்பு கொண்ட செய்தி போல் எங்கும் பரந்து விட்டது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நான் அவரைப் பார்த்ததும் பேசியதும் கொஞ்சமே! ஆனால் இந்த ஊரார் பேச்சோ நிலவைப் பாம்பு பிடித்ததுபோல் ஊர் முழுக்கப் பரவிவிட்டதே!

விளக்கம் — கலைஞர்

காதலர் சந்தித்துக் கொண்டது ஒருநாள்தான் என்றாலும், சந்திரனைப் பாம்பு விழுங்குவதாகக் கற்பனையாகக் கூறப்படும் ``கிரகணம்'' எனும் நிகழ்ச்சியைப் போல அந்தச் சந்திப்பு ஊர் முழுவதும் அலராகப் பரவியது

Meaning (English)

It was but a single day that I looked on (my lover); but the rumour thereof has spread like the seizure of the moon by the serpent.

Open the interactive app →