Thirukkuralagam
Kural 1147 of 1330

ஊரவர் கெளவை எருவாக அன்னைசொல் நீராக நீளும்இந் நோய்.

Ooravar Kelavai Eruvaaka Annaisol Neeraaka Neelumin Noi

My anguish grows apace: the town's reportManures it; my mother's word doth water it

விளக்கம் — மு. வரதராசன்

இந்தக் காம நோய் ஊராரின் அலர் தூற்றலே எருவாகவும் அன்னை கடிந்து சொல்லும் கடுஞ்சொல்லே நீராகவும் கொண்டு செழித்து வளர்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இந்த ஊர்ப் பெண்கள் பேசும் பேச்சே உரமாக தாயின் தடைச்சொல் நீராக என் காதல் பயிர் வளரும்.

விளக்கம் — கலைஞர்

ஒருவரையொருவர் விரும்பி மலர்ந்த காதலானது ஊர்மக்கள் பேசும் பழிச்சொற்களை எருவாகவும் அன்னையின் கடுஞ்சொற்களை நீராகவும் கொண்டு வளருமே தவிரக் கருகிப் போய்விடாது

Meaning (English)

This malady (of lust) is manured by the talk of women and watered by the (harsh) words of my mother.

Open the interactive app →