Thirukkuralagam
Kural 1153 of 1330

அரிதரோ தேற்றம் அறிவுடையார் கண்ணும் பிரிவோ ரிடத்துண்மை யான்.

Aridharo Thetram Arivutaiyaar Kannum Pirivo Ritaththunmai Yaan

To trust henceforth is hard, if ever he depart,E'en he, who knows his promise and my breaking heart

விளக்கம் — மு. வரதராசன்

அறிவுடைய காதலரிடத்தும் பிரிவு ஒரு காலத்தில் உள்ள படியால் அவர் பிரியேன் என்று சொல்லும் உறுதி மொழியை நம்பித் தெளிவது அரிது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எல்லாம் அறியும் ஆற்றல் உடைய அவரும் ஒருநேரம் பிரிவார் என்றால், என்மீது அவர் கொண்டிருக்கும் அன்பை அறிந்து கொள்ள முடியவில்லை.

விளக்கம் — கலைஞர்

பிரிவுத் துன்பத்தை அறிந்துள்ள காதலரும் நம்மைப் பிரிந்த செல்ல நேரிடுவதால்; ``பிரிந்திடேன்'' என அவர் கூறவதை உறுதி செய்திட இயலாது

Meaning (English)

As even the lover who understands (everything) may at times depart, confidence is hardly possible.

Open the interactive app →