Thirukkuralagam
Kural 1152 of 1330

இன்கண் உடைத்தவர் பார்வல் பிரிவஞ்சும் புன்கண் உடைத்தால் புணர்வு.

Inkan Utaiththavar Paarval Pirivanjum Punkan Utaiththaal Punarvu

It once was perfect joy to look upon his face; But now the fear of parting saddens each embrace

விளக்கம் — மு. வரதராசன்

அவருடைய பார்வை முன்பு இன்பம் உடையதாக இருந்தது, இப்போது அவருடைய கூட்டம் பிரிவுக்கு அஞ்சுகின்ற துன்பம் உடையதாக இருக்கின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அவர் பார்வை எனக்கு மகிழ்ச்சிதான். அவர் செயலோ பிரியப் போகிறார் என்ற அச்சத்தைத் தந்து கொண்டிருக்கிறதே!

விளக்கம் — கலைஞர்

முன்பெல்லாம் அவரைக் கண்களால் தழுவிக் கொண்டதே இன்பமாக இருந்தது; ஆனால், இப்போது உடல் தழுவிக் களிக்கும் போதுகூடப் பிரிவை எண்ணும் அச்சத்தால் துன்பமல்லவா வருத்துகிறது!

Meaning (English)

His very look was once pleasing; but (now) even intercourse is painful through fear of separation.

Open the interactive app →