Thirukkuralagam
Kural 1156 of 1330

பிரிவுரைக்கும் வன்கண்ணர் ஆயின் அரிதவர் நல்குவர் என்னும் நசை.

Pirivuraikkum Vankannar Aayin Aridhavar Nalkuvar Ennum Nasai

To cherish longing hope that he should ever gracious be,Is hard, when he could stand, and of departure speak to me

விளக்கம் — மு. வரதராசன்

பிரிவைப்பற்றி தெரிவிக்கும் அளவிற்குக் கல் நெஞ்சம் உடையவரானால் , அத்தகையவர் திரும்பிவந்து அன்பு செய்வார் என்னும் ஆசை பயனற்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நான் வேலையின் பொருட்டுப் பிரியப் போகிறேன் என்று அவரே என்னிடம் சொல்லும் அளவிற்குக் கொடியவர் என்றால், அவர் பிரிவைத் தாங்க முடியாத என் மீது அன்பு காட்டுவார் என்னும் என் எதிர்பார்ப்பு பயனற்றது.

விளக்கம் — கலைஞர்

போய் வருகிறேன் என்று கூறிப் பிரிகிற அளவுக்குக் கல் மனம் கொண்டவர் திரும்பி வந்து அன்பு காட்டுவார் என ஆவல் கொள்வது வீண்

Meaning (English)

If he is so cruel as to mention his departure (to me), the hope that he would bestow (his love) must be given up.

Open the interactive app →