Kural 116 of 1330
கெடுவல்யான் என்பது அறிகதன் நெஞ்சம் நடுவொரீஇ அல்ல செயின்.
Ketuvalyaan Enpadhu Arikadhan Nenjam Natuvoreei Alla Seyin
If, right deserting, heart to evil turn,Let man impending ruin's sign discern
விளக்கம் — மு. வரதராசன்
தன் நெஞ்சம் நடுவுநிலை நீங்கித் தவறு செய்ய நினைக்குமாயின், நான் கெடப்போகின்றேன் என்று ஒருவன் அறிய வேண்டும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
தன் நெஞ்சம் நீதியை விட்டுவிட்டு அநீதி செய்ய எண்ணி னால், அதுவே தான் கெடப் போவதற்கு உரிய அறிகுறி.
விளக்கம் — கலைஞர்
நடுவுநிலைமை தவறிச் செயல்படலாம் என்று ஒரு நினைப்பு ஒருவனுக்கு வந்து விடுமானால் அவன் கெட்டொழியப் போகிறான் என்று அவனுக்கே தெரியவேண்டும்
Meaning (English)
Let him whose mind departing from equity commits sin well consider thus within himself, “I shall perish.”