Thirukkuralagam
Kural 117 of 1330

கெடுவாக வையாது உலகம் நடுவாக நன்றிக்கண் தங்கியான் தாழ்வு.

Ketuvaaka Vaiyaadhu Ulakam Natuvaaka Nandrikkan Thangiyaan Thaazhvu

The man who justly lives, tenacious of the right,In low estate is never low to wise man's sight

விளக்கம் — மு. வரதராசன்

நடுவுநிலைமை நின்று அறநெறியில் நிலைத்து வாழகின்றவன் அடைந்த வறுமை நிலையைக் கேடு என கொள்ளாது உலகு.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நீதி என்னும் அறவாழ்வு வாழ்ந்தும் ஒருவன் வறுமைப்பட்டுப் போவான் என்றால், அதை வறுமை என்று உயர்ந்தோர் எண்ணவேமாட்டார்.

விளக்கம் — கலைஞர்

நடுவுநிலைமை தவறாமல் அறவழியில் வாழ்கிற ஒருவருக்கு அதன் காரணமாகச் செல்வம் குவியாமல் வறுமை நிலை ஏற்படுமேயானால் அவரை உலகம் போற்றுமே தவிரத் தாழ்வாகக் கருதாது

Meaning (English)

The great will not regard as poverty the low estate of that man who dwells in the virtue of equity.

Open the interactive app →