Thirukkuralagam
Kural 1161 of 1330

மறைப்பேன்மன் யானிஃதோ நோயை இறைப்பவர்க்கு ஊற்றுநீர் போல மிகும்.

Maraippenman Yaaniqdho Noyai Iraippavarkku Ootruneer Pola Mikum

I would my pain conceal, but see! it surging swells,As streams to those that draw from ever-springing wells

விளக்கம் — மு. வரதராசன்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் யான் மறைப்பேன், ஆனால் இது இறைப்பவர்க்கு ஊற்று நீர் மிகுவது போல் மிகுகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் காதல் துன்பத்தை மற்றவர் அறிந்துவிடக்கூடாது என்று மறைக்கவே செய்தேன்; ஆனாலும் இறைக்க இறைக்க ஊற்றுநீர் பெருகுவது போல மறைக்க மறைக்க என் துன்பமும் பெருகவே செய்கிறது.

விளக்கம் — கலைஞர்

இறைக்க இறைக்கப் பெருகும் ஊற்றுநீர் போல, பிறர் அறியாமல் மறைக்க மறைக்கக் காதல் நோயும் பெருகும்

Meaning (English)

I would hide this pain from others; but it (only) swells like a spring to those who drain it.

Open the interactive app →