Thirukkuralagam
Kural 1162 of 1330

கரத்தலும் ஆற்றேன்இந் நோயைநோய் செய்தார்க்கு உரைத்தலும் நாணுத் தரும்.

Karaththalum Aatrenin Noyainoi Seydhaarkku Uraiththalum Naanuth Tharum

I cannot hide this pain of mine, yet shame restrainsWhen I would tell it out to him who caused my pains

விளக்கம் — மு. வரதராசன்

இக் காமநோயைப் பிறர் அறியாமல் முற்றிலும் மறைக்கவும் முடியவில்லை, நோய் செய்த காதலர்க்குச் சொல்வதும் நாணம் தருகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இந்தத் துன்பத்தை என்னால் மறைக்கவும் முடியவில்லை. துன்பத்தைத் தந்த இவருக்கு (எழுத்தில் தொலைபேசியில்) இதைச் சொல்லவும் வெட்கமாக இருக்கிறது.

விளக்கம் — கலைஞர்

காதல் நோயை என்னால் மறைக்கவும் முடியவில்லை; இதற்குக் காரணமான காதலரிடம் நாணத்தால் உரைக்கவும் முடியவில்லை

Meaning (English)

I cannot conceal this pain, nor can I relate it without shame to him who has caused it.

Open the interactive app →