Thirukkuralagam
Kural 1174 of 1330

பெயலாற்றா நீருலந்த உண்கண் உயலாற்றா உய்வில்நோய் என்கண் நிறுத்து.

Peyalaatraa Neerulandha Unkan Uyalaatraa Uyvilnoi Enkan Niruththu

Those eyes have wept till all the fount of tears is dry,That brought upon me pain that knows no remedy

விளக்கம் — மு. வரதராசன்

என் கண்கள், தப்பிப் பிழைக்க முடியாத தீராத காமநோயை என்னிடத்தில் உண்டாக்கி நிறுத்திவிட்டு, தாமும் அழமுடியாமல் நீர் வறண்டு விட்டன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

மை தீட்டப்பட்ட இந்தக் கண்கள் நான் தப்பிக்கவும், வாழவும் முடியாத காதல் துன்பத்தை எனக்குத் தந்துவிட்டுத் தாமும் அழ முடியாமல் நீர் வற்றிப் போய்விட்டன.

விளக்கம் — கலைஞர்

தப்பிப் பிழைக்க முடியாத, தீராத காதல் நோயை எனக்குத் தருவதற்குக் காரணமான என் கண்கள், தாமும் அழ முடியாமல் வற்றிப் போய்விட்டன

Meaning (English)

These painted eyes have caused me a lasting mortal disease; and now they can weep no more, the tears having dried up.

Open the interactive app →