Thirukkuralagam
Kural 1173 of 1330

கதுமெனத் தாநோக்கித் தாமே கலுழும் இதுநகத் தக்க துடைத்து.

Kadhumenath Thaanokkith Thaame Kaluzhum Ithunakath Thakka Thutaiththu

The eyes that threw such eager glances round erewhileAre weeping now. Such folly surely claims a smile

விளக்கம் — மு. வரதராசன்

அன்று காதலரைக் கண்கள் தாமே விரைந்து நோக்கி இன்று தாமே அழுகின்றன; இது நகைக்கத்தக்க தன்மை உடையது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அன்றைக்கு அவரை வேகமாகப் பார்த்துவிட்டு, இன்றைக்குத் தனியாக இருந்து இந்தக் கண்கள் அழுவதைப் பார்த்தால் சிரிப்புத்தான் வருகிறது.

விளக்கம் — கலைஞர்

தாமாகவே பாய்ந்து சென்று அவரைப் பார்த்து மகிழ்ந்த கண்கள், இன்று தாமாகவே அழுகின்றன இது நகைக்கத்தக்க ஒன்றாகும்

Meaning (English)

They themselves looked eagerly (on him) and now they weep. Is not this to be laughed at ?

Open the interactive app →