Thirukkuralagam
Kural 118 of 1330

சமன்செய்து சீர்தூக்குங் கோல்போல் அமைந்தொருபால் கோடாமை சான்றோர்க் கணி.

Samanseydhu Seerdhookkung Kolpol Amaindhorupaal Kotaamai Saandrork Kani

To stand, like balance-rod that level hangs and rightly weighs,With calm unbiassed equity of soul, is sages' praise

விளக்கம் — மு. வரதராசன்

முன்னே தான் சமமாக இருந்து, பின்பு பொருளைச் சீர்தூக்கும் துலாக்கோல் போல் அமைந்து, ஒரு பக்கமாக சாயாமல் நடுவுநி‌லைமை போற்றுவது சான்றோர்க்கு அழகாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முதலில் சமமாக நின்று பிறகு தன்மீது வைக்கப்பட்ட பாரத்தை நிறுத்துக் காட்டும் தராசு போல, நீதிக்குரிய இலக்கணங்களால் அமைந்து ஓரம் சார்ந்து விடாமல் இருப்பது சான்றோராகிய நீதிபதிகளுக்கு அழகாம்.

விளக்கம் — கலைஞர்

ஒரு பக்கம் சாய்ந்து விடாமல் நாணயமான தாரசு முள் போல இருந்து நியாயம் கூறுவதுதான் உண்மையான நடுவுநிலைமை என்பதற்கு அழகாகும்

Meaning (English)

To incline to neither side, but to rest impartial as the even-fixed scale is the ornament of the wise.

Open the interactive app →