Thirukkuralagam
Kural 1184 of 1330

உள்ளுவன் மன்யான் உரைப்பது அவர்திறமால் கள்ளம் பிறவோ பசப்பு.

Ulluvan Manyaan Uraippadhu Avardhiramaal Kallam Piravo Pasappu

I meditate his words, his worth is theme of all I say,This sickly hue is false that would my trust betray

விளக்கம் — மு. வரதராசன்

யான் அவருடைய நல்லியல்புகளை நினைக்கின்றேன்; யான் உரைப்பதும் அவற்றையே; அவ்வாறிருந்தும் பசலை வந்தது வஞ்சனையோ? வேறு வகையோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

நான் நினைப்பதெல்லாம் அவரைத்தான். சொல்வது எல்லாம் அவர் குணங்களைத்தாம்; இருந்தும் இந்தப் பசலை வந்துவிட்டதே; இது வஞ்சகம் அல்லவா?

விளக்கம் — கலைஞர்

யான் நினைப்பதும், உரைப்பதும் அவரது நேர்மைத் திறன் பற்றியதாகவே இருக்கும்போது, என்னையறியாமலோ வேறு வழியிலோ இப்பசலை நிறம் வந்தது எப்படி?

Meaning (English)

I think (of him); and what I speak about is but his excellence; still is there sallowness; and this is deceitful.

Open the interactive app →