Thirukkuralagam
Kural 1190 of 1330

பசப்பெனப் பேர்பெறுதல் நன்றே நயப்பித்தார் நல்காமை தூற்றார் எனின்.

Pasappenap Perperudhal Nandre Nayappiththaar Nalkaamai Thootraar Enin

'Tis well, though men deride me for my sickly hue of pain; If they from calling him unkind, who won my love, refrain

விளக்கம் — மு. வரதராசன்

பிரிவுக்கு உடன்படச் செய்த காதலர் பிரிந்து வருத்துதலைப் பிறர் தூற்றாமல் இருப்பாரானால், யான் பசலை உற்றதாக பெயர் எடுத்தல் நல்லதே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என்னைச் சம்மதிக்கச் செய்து பிரிந்தவர் இன்னும் வராமல் இருப்பதை எண்ணி அவரை ஏசாமல், இவளே பசலை ஆயினாள் என்று இம்மக்கள் சொல்லுவர் என்றால் அப்படி ஓரு பெயரைப் பெறுவதும் நல்லதே.

விளக்கம் — கலைஞர்

என்னைப் பிரிவுக்கு உடன்படுமாறு செய்த காதலரை அன்பில்லாதவர் என்று யாரும் தூற்றமாட்டார்கள் எனில், பசலை படர்ந்தவள் என நான் பெயரெடுப்பது நல்லது தான்!

Meaning (English)

It would be good to be said of me that I have turned sallow, if friends do not reproach with unkindness him who pleased me (then).

Open the interactive app →