Thirukkuralagam
Kural 1201 of 1330

உள்ளினும் தீராப் பெருமகிழ் செய்தலால் கள்ளினும் காமம் இனிது.

Ullinum Theeraap Perumakizh Seydhalaal Kallinum Kaamam Inidhu

From thought of her unfailing gladness springs,Sweeter than palm-rice wine the joy love brings

விளக்கம் — மு. வரதராசன்

நினைத்தாலும் தீராத பெரிய மகிழ்ச்சியைச் செய்தலால் ( உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் ) கள்ளை விட காமம் இன்பமானதாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

முன்பு என் மனைவியுடன் கூடி அனுபவித்த இன்பத்தைப் பிரிந்திருக்கும் போது நினைத்தாலும் அது நீங்காத பெரு மகிழ்ச்சியைத் தருவதால் குடித்தால் மட்டுமே மகிழ்ச்சி தரும் கள்ளைக் காட்டிலும் காதல் இன்பமானது.

விளக்கம் — கலைஞர்

உண்டபோது மட்டும் மகிழ்ச்சி தரும் கள்ளைவிட நினைத்தாலே நெஞ்சினிக்கச் செய்யும் காதல் இன்பமானதாகும்

Meaning (English)

Sexuality is sweeter than liquor, because when remembered, it creates a most rapturous delight.

Open the interactive app →