Kural 1202 of 1330
எனைத்தொனறு ஏனிதேகாண் காமம்தாம் வீழ்வார் நினைப்ப வருவதொன்று ஏல்.
Enaiththonaru Inidhekaan Kaamamdhaam Veezhvaar Ninaippa Varuvadhondru El
How great is love! Behold its sweetness past belief!Think on the lover, and the spirit knows no grief
விளக்கம் — மு. வரதராசன்
தாம் விரும்புகின்ற காதலர் தம்மை நினைத்தலும் பிரிவால் வரக்கூடிய துன்பம் இல்லாமல் போகின்றது. அதனால் காமம் எவ்வளவாயினும் இன்பம் தருவதே ஆகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நாம் விரும்புபவரைப் பிரிவிலும் நினைத்தால் பிரிவுத் துன்பம் வராது. அதனால் என்ன ஆனாலும் சரி, காதல் இனியதுதான்.
விளக்கம் — கலைஞர்
விரும்பி இணைந்த காதலரை நினைத்தலால், பிரிவின் போது வரக்கூடிய துன்பம் வருவதில்லை எனவே எந்த வகையிலும் காதல் இனிதேயாகும்
Meaning (English)
Even to think of one’s beloved gives one no pain. Sexuality, in any degree, is always delightful.