Thirukkuralagam
Kural 1209 of 1330

விளியுமென் இன்னுயிர் வேறல்லம் என்பார் அளியின்மை ஆற்ற நினைந்து.

Viliyumen Innuyir Verallam Enpaar Aliyinmai Aatra Ninaindhu

Dear life departs, when his ungracious deeds I ponder o'er,Who said erewhile, 'We're one for evermore'

விளக்கம் — மு. வரதராசன்

நாம் இருவரும் வேறு அல்லேம் என்று அடிக்கடி சொல்லும் அவர் இப்போது அன்பு இல்லாதிருத்தலை மிக நினைத்து என் இனிய உயிர் அழிகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நம் உயிர் வேறு அல்ல; ஒன்றே என்று முன்பு சொன்ன அவரின் இப்போதைய கருணையற்ற தன்மையை அதிகம் எண்ணி, என் உயிர் போய்க்கொண்டே இருக்கிறது.

விளக்கம் — கலைஞர்

``நாம் ஒருவரே; வேறு வேறு அல்லர்'' எனக்கூறிய காதலர் இரக்கமில்லாதவராக என்னைப் பிரிந்து சென்றுள்ளதை நினைத்து வருந்துவதால் என்னுயிர் கொஞ்சம் கொஞ்சமாகப் போய்க் கொண்டிருக்கிறது

Meaning (English)

My precious life is wasting away by thinking too much on the cruelty of him who said we were not different.

Open the interactive app →