Kural 1230 of 1330
பொருள்மாலை யாளரை உள்ளி மருள்மாலை மாயும்என் மாயா உயிர்.
Porulmaalai Yaalarai Ulli Marulmaalai Maayumen Maayaa Uyir
This darkening eve, my darkling soul must perish utterly; Remembering him who seeks for wealth, but seeks not me
விளக்கம் — மு. வரதராசன்
( பிரிவுத் துன்பத்தால்) மாயமாய் நின்ற என் உயிர், பொருள் காரணமாகப் பிரிந்து சென்ற காதலரை நினைந்து மயங்குகின்ற இம் மாலைப்பொழுதில் மாய்கின்றது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அவர் என்னைப் பிரிந்தபோது பொறுத்துக் கொண்ட என் உயிர், பொருள் மயக்கமே பெரிதாக உடைய அவரை நினைத்து மயங்கும் இந்த மாலைப் பொழுதில் மடிகின்றது.
விளக்கம் — கலைஞர்
பொருள் ஈட்டுவதற்கச் சென்றுள்ள காதலரை எண்ணி மாய்ந்து போகாத என்னுயிர், மயக்கும் இந்த மாலைப் பொழுதில் மாய்ந்து போகின்றது
Meaning (English)
My (hitherto) unextinguished life is now lost in this bewildering night at the thought of him who has the nature of wealth.