Thirukkuralagam
Kural 1229 of 1330

பதிமருண்டு பைதல் உழக்கும் மதிமருண்டு மாலை படர்தரும் போழ்து.

Padhimaruntu Paidhal Uzhakkum Madhimaruntu Maalai Patardharum Pozhdhu

If evening's shades, that darken all my soul, extend; From this afflicted town will would of grief ascend

விளக்கம் — மு. வரதராசன்

அறிவு மயங்கும்படியாக மாலைப்பொழுது வந்து படரும்போது, இந்த ஊரும் மயங்கி என்னைப் போல் துன்பத்தால் வருந்தும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

இதற்கு முன்பு நான் மட்டும்தான் மயங்கித் துன்புற்றேன்; இனிப் பார்த்தவர் எல்லாம் மதி மயங்கும்படி மாலைப் பொழுது வரும்போது இந்த ஊரே மயங்கித் துன்பப்படும்.

விளக்கம் — கலைஞர்

என் அறிவை மயக்கும் மாலைப் பொழுது, இந்த ஊரையே மயக்கித் துன்பத்தில் ஆழ்த்துவது போல் எனக்குத் தோன்றுகிறது

Meaning (English)

When night comes on confusing (everyone’s) mind, the (whole) town will lose its sense and be plunged in sorrow.

Open the interactive app →