Thirukkuralagam
Kural 1240 of 1330

கண்ணின் பசப்போ பருவரல் எய்தின்றே ஒண்ணுதல் செய்தது கண்டு.

Kannin Pasappo Paruvaral Eydhindre Onnudhal Seydhadhu Kantu

The dimness of her eye felt sorrow now,Beholding what was done by that bright brow

விளக்கம் — மு. வரதராசன்

காதலியின் ஒளி பொருந்திய நெற்றி, பசலை நிறம் உற்றதைக் கண்டு, அவளுடைய க்ண்களில் பசலையும் துன்பம் அடைந்து விட்டது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

குளிர்ந்த சிறுகாற்று இடையே நுழைந்ததைக் கண்டு நெற்றி, நிற வேறுபாடு அடைந்தது. அதன் மென்மையைப் பார்த்து வெட்கப்பட்ட கண்ணும் துன்பம் உற்றதே!

விளக்கம் — கலைஞர்

பிரிவுத் துயரால் பிறைநுதல் பசலை நிறமடைந்ததைக் கண்டு அவளது கண்களின் பசலையும் பெருந்துன்பம் அடைந்துவிட்டது

Meaning (English)

Was it at the sight of what the bright forehead had done that the sallowness of her eyes became sad?

Open the interactive app →