Thirukkuralagam
Kural 1239 of 1330

முயக்கிடைத் தண்வளி போழப் பசப்புற்ற பேதை பெருமழைக் கண்.

Muyakkitaith Thanvali Pozhap Pasapputra Pedhai Perumazhaik Kan

As we embraced a breath of wind found entrance there; The maid's large liquid eyes were dimmed with care

விளக்கம் — மு. வரதராசன்

தழுவுதலுக்கு இடையே குளி்ந்த காற்று நுழைய, காதலியின் பெரிய மழை போன்ற கண்கள் பசலை நிறம் அடைந்தன.

விளக்கம் — சாலமன் பாப்பையா

(அப்படி) நான் கையை மெல்ல எடுத்ததால் எங்கள் தழுவலுக்கு இடையே குளிர்ந்த சிறுகாற்று நுழைந்தது. இந்த இடைவெளியைக்கூடப் பொறுக்காமல் அவளுடைய பெரிய குளிர்ந்த கண்கள் நிறம் இழந்தன. இப்போது அவை எப்படி இருக்கின்றனவோ?

விளக்கம் — கலைஞர்

இறுகத் தழுவியிருந்த போது, இடையே குளிர்ந்த காற்று நுழைந்ததால் அதையே ஒரு பிரிவு எனக் கருதிக் காதலியின் அகன்று நீண்ட கண்கள் பசலை நிறம் கொண்டன

Meaning (English)

When but a breath of breeze penetrated our embrace, her large cool eyes became sallow.

Open the interactive app →