Thirukkuralagam
Kural 1249 of 1330

உள்ளத்தார் காத லவரால் உள்ளிநீ யாருழைச் சேறியென் நெஞ்சு.

Ullaththaar Kaadha Lavaraal Ullinee Yaaruzhaich Cheriyen Nenju

My heart! my lover lives within my mind; Roaming, whom dost thou think to find

விளக்கம் — மு. வரதராசன்

என் நெஞ்சே! காதலர் உன் உள்ளத்தில் உள்ளவராக இருக்கும்போது நீ அவரை நினைத்து யாரிடம் தேடிச் செல்கின்றாய்?

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! நம் அன்பர் நம் மனத்திற்குள்ளேயே இருக்க, நீ அவரைத் தேடி எவரிடம் போகிறாய்?

விளக்கம் — கலைஞர்

உள்ளத்திலேயே காதலர் குடி கொண்டிருக்கும்போது, நெஞ்சமே! நீ அவரை நினைத்து வெளியே எவரிடம் தேடி அலைகிறாய்?

Meaning (English)

O my soul! to whom would you repair, while the dear one is within yourself?

Open the interactive app →