Kural 1250 of 1330
துன்னாத் துறந்தாரை நெஞ்சத்து உடையேமா இன்னும் இழத்தும் கவின்.
Thunnaath Thurandhaarai Nenjaththu Utaiyemaa Innum Izhaththum Kavin
If I should keep in mind the man who utterly renounces me,My soul must suffer further loss of dignity
விளக்கம் — மு. வரதராசன்
நம்மோடு பொருந்தி இருக்காமல் கைவிட்டுச சென்ற காதலரை நெஞ்சில் வைத்திருக்கும்போது இன்னும் மெலிந்து அழகை இழந்து வருகின்றோம்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நம்மைக் கலவாமல் பிரிந்து போனவரை நாம் நம் மனத்திற்குள்ளேயே கொண்டிருப்பதால் முன்பு இழந்த புற அழகை மட்டுமே அன்று இருக்கும் அக அழகையும் இழக்கப் போகிறோம்.
விளக்கம் — கலைஞர்
சேராமல் பிரிந்து சென்ற காதலரைச் சிந்தையில் வைத்திருப்பதால் மேலும் மேனியெழில் இழந்து மெலிந்து அழிய வேண்டியுள்ளது
Meaning (English)
If I retain in my heart him who has left me without befriending me, I shall lose even the (inward) beauty that remains.