Kural 1259 of 1330
புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு.
Pulappal Enachchendren Pullinen Nenjam Kalaththal Uruvadhu Kantu
'I 'll shun his greeting'; saying thus with pride away I went:I held him in my arms, for straight I felt my heart relent
விளக்கம் — மு. வரதராசன்
ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.
விளக்கம் — கலைஞர்
ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்
Meaning (English)
I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!