Thirukkuralagam
Kural 1259 of 1330

புலப்பல் எனச்சென்றேன் புல்லினேன் நெஞ் சம் கலத்தல் உறுவது கண்டு.

Pulappal Enachchendren Pullinen Nenjam Kalaththal Uruvadhu Kantu

'I 'll shun his greeting'; saying thus with pride away I went:I held him in my arms, for straight I felt my heart relent

விளக்கம் — மு. வரதராசன்

ஊடுவேன் என்று எண்ணிக் கொண்டு சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விட்டு அவரோடு கூடுவதை கண்டு தழுவினேன்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

அவர் வந்தபோது ஊடல் கொள்ளலாம் என்று எண்ணி, அவர்முன் நில்லாது அப்பால் போனேன்; நான் போன போதும், என் நெஞ்சம் அடக்கம் இல்லாமல் அவரோடு கலக்கத் தொடங்குவதைக் கண்டு இனி அது முடியாது என்று அவரைத் தழுவினேன்.

விளக்கம் — கலைஞர்

ஊடல் கொண்டு பிணங்குவோம் என நினைத்துதான் சென்றேன்; ஆனால் என் நெஞ்சம் என்னை விடுத்து அவருடன் கூடுவதைக் கண்டு என் பிடிவாதத்தை மறந்து தழுவிக் கொண்டேன்

Meaning (English)

I said I would feign dislike and so went (away); (but) I embraced him the moment I say my mind began to unite with him!

Open the interactive app →