Thirukkuralagam
Kural 127 of 1330

யாகாவா ராயினும் நாகாக்க காவாக்கால் சோகாப்பர் சொல்லிழுக்குப் பட்டு.

Yaakaavaa Raayinum Naakaakka Kaavaakkaal Sokaappar Sollizhukkup Pattu

Whate'er they fail to guard, o'er lips men guard should keep; If not, through fault of tongue, they bitter tears shall weep

விளக்கம் — மு. வரதராசன்

காக்க வேண்டியவற்றுள் எவற்றைக் காக்கா விட்டாலும் நாவையாவது காக்க வேண்டு்ம்; காக்கத் தவறினால் சொற்குற்றத்தில் அகப்பட்டுத் துன்புறுவர்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

எதைக் காக்க முடியாதவரானாலும் நா ஒன்றையாவது காத்துக் கொள்ள வேண்டும். முடியாது போனால் சொல்குற்றத்தில் சிக்கித் துன்பப்படுவர்.

விளக்கம் — கலைஞர்

ஒருவர் எதைக் காத்திட முடியாவிட்டாலும் நாவையாவது அடக்கிக் காத்திட வேண்டும் இல்லையேல் அவர் சொன்ன சொல்லே அவர் துன்பத்துக்குக் காரணமாகி விடும்

Meaning (English)

Whatever besides you leave unguarded, guard your tongue; otherwise errors of speech and the consequent misery will ensue.

Open the interactive app →