Thirukkuralagam
Kural 128 of 1330

ஒன்றானுந் தீச்சொல் பொருட்பயன் உண்டாயின் நன்றாகா தாகி விடும்.

Ondraanun Theechchol Porutpayan Untaayin Nandraakaa Thaaki Vitum

Though some small gain of good it seem to bring,The evil word is parent still of evil thing

விளக்கம் — மு. வரதராசன்

தீய ‌சொற்களின் பொருளால் விளையும் தீமை ஒன்றாயினும் ஒருவனிடம் உண்டானால், அதனால் மற்ற அறங்களாலும் நன்மை விளையாமல் போகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

தீய சொற்களின் பொருளால் பிறர்க்கு வரும் துன்பம் சிறிதே என்றாலும் அந்தக் குறை ஒருவனிடம் இருந்தால் அவனுக்குப் பிற அறங்களால் வரும் நன்மையம் தீமையாகப் போய்விடும்.

விளக்கம் — கலைஞர்

ஒரு குடம் பாலில் துளி நஞ்சுபோல், பேசும் சொற்களில் ஒரு சொல் தீய சொல்லாக இருந்து துன்பம் விளைவிக்குமானாலும், அந்தப் பேச்சில் உள்ள நல்ல சொற்கள் அனைத்தும் தீயவாகிவிடும்

Meaning (English)

If a man’s speech be productive of a single evil, all the good by him will be turned into evil.

Open the interactive app →