Thirukkuralagam
Kural 1270 of 1330

பெறின்என்னாம் பெற்றக்கால் என்னாம் உறினென்னாம் உள்ளம் உடைந்துக்கக் கால்.

Perinennaam Petrakkaal Ennaam Urinennaam Ullam Utaindhukkak Kaal

What's my return, the meeting hour, the wished-for greeting worth,If she heart-broken lie, with all her life poured forth

விளக்கம் — மு. வரதராசன்

துன்பத்தைத் தாங்காமல் மனம் உடைந்து அழிந்து விட்டால், நம்மைத் திரும்பப்‌ பெறுவதனால் என்ன? பெற்றக்கால் என்ன? பெற்றுப் பொருந்தினாலும் என்ன?

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் பிரிவைத் தாங்காமல் உள்ளம் உடைய, அவளுக்கு ஒன்று ஆகிவிட்டால் அதன் பிறகு அவள் என்னைப் பெறுவதால் ஆவது என்ன? பெற்றால்தான் என்ன? உடம்போடு கலந்தால்தான் என்ன? ஒரு பயனும் இல்லை.

விளக்கம் — கலைஞர்

துன்பத்தைத் தாங்கிக் கொள்ள முடியாமல் மனம் நிலையிழந்து போயிவிடுமானால், பிறகு ஒருவரையொருவர் திரும்பச் சந்திப்பதனாலோ, சந்தித்துக் கூடவதினாலோ, என்ன பயன்?

Meaning (English)

After (my wife) has died of a broken heart, what good will there be if she is to receive me, has received me, or has even embraced me?

Open the interactive app →