Thirukkuralagam
Kural 1271 of 1330

கரப்பினுங் கையிகந் தொல்லாநின் உண்கண் உரைக்கல் உறுவதொன் றுண்டு.

Karappinung Kaiyikan Thollaanin Unkan Uraikkal Uruvadhon Runtu

Thou hid'st it, yet thine eye, disdaining all restraint,Something, I know not, what, would utter of complaint

விளக்கம் — மு. வரதராசன்

நீ சொல்லாமல் மறைத்தாலும் நிற்காமல் உன்னைக் கடந்து உன்னுடைய கண்கள் எனக்குச் சொல்லக் கூடிய செய்தி ஒன்று இருக்கிறது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நீ சொல்லாது மறைத்தாலும், மறைக்க உடன்படாமல், உன் மை தீட்டப் பெற்ற கண்களே எனக்குச் சொல்ல விரும்பும் செய்தி ஒன்று உண்டு.

விளக்கம் — கலைஞர்

வெளியில் சொல்லாமல் மறைக்கப் பார்த்தாலும், நிற்காமல் தடைகடந்து விழிகள் சொல்லக்கூடிய செய்தி ஒன்று உண்டு; அதுதான் பிரிவை விரும்பாத காதல்

Meaning (English)

Though you would conceal (your feelings), your painted eyes would not, for, transgressing (their bounds), they tell (me) something.

Open the interactive app →