Thirukkuralagam
Kural 1292 of 1330

உறாஅ தவர்க்கண்ட கண்ணும் அவரைச் செறாஅரெனச் சேறியென் நெஞ்சு.

Uraaa Thavarkkanta Kannum Avaraich Cheraaarenach Cheriyen Nenju

'Tis plain, my heart, that he 's estranged from thee; Why go to him as though he were not enemy

விளக்கம் — மு. வரதராசன்

என் நெஞசே! நம்மேல் அன்பு கொள்ளாத காதலரைக் கண்டபோதும், அவர் வெறுக்கமாட்டார் என்று எண்ணி அவரிடம் செல்கின்றாயே!

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் நெஞ்சே! என்மீது அன்பு இல்லாதவரை உள்ளபடியே நீ அறிந்திருந்தும் நாம் போனால் அவர் கோபப்படமாட்டார் என்று எண்ணி நீ அவரிடமே செல்லுகின்றாய்!

விளக்கம் — கலைஞர்

நெஞ்சே! நம்மிடம் அன்பு காட்டாதவர் அவர் எனக் கண்ட பிறகும், நம்மை வெறுக்க மாட்டார் என நம்பி அவரிடம் செல்கின்றாயே

Meaning (English)

O my soul! although you have known him who does not love me, still do you go to him, saying “he will not be displeased.

Open the interactive app →