Thirukkuralagam
Kural 1293 of 1330

கெட்டார்க்கு நட்டார்இல் என்பதோ நெஞ்சேநீ பெட்டாங்கு அவர்பின் செலல்.

Kettaarkku Nattaaril Enpadho Nenjenee Pettaangu Avarpin Selal

'The ruined have no friends, 'they say; and so, my heart,To follow him, at thy desire, from me thou dost depart

விளக்கம் — மு. வரதராசன்

நெஞ்சே! நீ உன் விருப்பத்தின்படியே அவர் பின் செல்வதற்குக் காரணம், துன்பத்தால் அழிந்தவர்‌க்கு நண்பர் இல்லை என்னும் எண்ண‌மோ?

விளக்கம் — சாலமன் பாப்பையா

நெஞ்சே! நீ என்னிடம் இல்லாமல் உன் விருப்பப்படியே அவரிடம் செல்லக் காரணம், இந்த உலகத்தில் கெட்டுப் போனவர்களுக்கு நண்பர் இல்லை என்பதனாலோ?

விளக்கம் — கலைஞர்

நெஞ்சே! நீ எனை விடுத்து அவரை விரும்பிப் பின் தொடர்ந்து செல்வது, துன்பத்தால் அழிந்தோர்க்கு நண்பர்கள் துணையிருக்க மாட்டார்கள் என்று சொல்வது போலவோ?

Meaning (English)

O my soul! do you follow him at pleasure under the belief that the ruined have no friends?

Open the interactive app →