Thirukkuralagam
Kural 1295 of 1330

பெறாஅமை அஞ்சும் பெறின்பிரிவு அஞ்சும் அறாஅ இடும்பைத்தென் நெஞ்சு.

Peraaamai Anjum Perinpirivu Anjum Araaa Itumpaiththen Nenju

I fear I shall not gain, I fear to lose him when I gain; And thus my heart endures unceasing pain

விளக்கம் — மு. வரதராசன்

( காதலரைப் பெறாதபோது) பெறாமைக்கு அஞ்சும்; பெற்றால் பிரிவை நினைத்து அஞ்சும்; ( இவ்வாறாக) என் நெஞ்சம் தீராத துன்பம் உடையதாகின்றது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

என் கணவர் என்னைப் பிரிந்து இருந்தபோது அவர் இல்லாததற்குப் பயப்படும்; அவர் வந்துவிட்டால், பிரிவாரே என்று பயப்படும். ஆகவே என் நெஞ்சம் நீங்காத துன்பத்தைப் பெற்றிருக்கிறது.

விளக்கம் — கலைஞர்

என் நெஞ்சத்துக்குத் துன்பம் தொடர் கதையாகவே இருக்கிறது காதலரைக் காணவில்லையே என்று அஞ்சும்; அவர் வந்து விட்டாலோ பிரிந்து செல்வாரே என நினைத்து அஞ்சும்

Meaning (English)

My soul fears when it is without him; it also fears when it is with him; it is subject to incessant sorrow.

Open the interactive app →