Kural 1296 of 1330
தனியே இருந்து நினைத்தக்கால் என்னைத் தினிய இருந்ததென் நெஞ்சு.
Thaniye Irundhu Ninaiththakkaal Ennaith Thiniya Irundhadhen Nenju
My heart consumes me when I ponder lone,And all my lover's cruelty bemoan
விளக்கம் — மு. வரதராசன்
காதலரைப் பிரிந்து தனியே இருந்து அவருடைய தவறுகளை நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போல் துன்பம் செய்வதாக இருந்தது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது.
விளக்கம் — கலைஞர்
காதலர் பிரிவைத் தனியே இருந்து நினைத்தபோது என் நெஞ்சம் என்னைத் தின்பது போலக் கொடுமையாக இருந்தது
Meaning (English)
My mind has been (here) in order to eat me up (as it were) whenever I think of him in my solitude.