Kural 1305 of 1330
நலத்தகை நல்லவர்க்கு ஏஎர் புலத்தகை பூஅன்ன கண்ணார் அகத்து.
Nalaththakai Nallavarkku Eer Pulaththakai Pooanna Kannaar Akaththu
Even to men of good and worthy mind, the petulanceOf wives with flowery eyes lacks not a lovely grace
விளக்கம் — மு. வரதராசன்
நல்ல பண்புகள் அமைந்த நல்ல ஆடவர்க்கு அழகு, மலர் போன்ற கண்களை உடைய மகளிரின் நெஞ்சம் விளையும் ஊடலின் சிறப்பே ஆகும்.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நல்ல குணங்களால் உயர்ந்தவருக்கு அழகு தருவது, பூப்போன்ற கண்ணை உடைய மனைவியின் மனத்தே நடக்கும் ஊடலின் மிகுதியே.
விளக்கம் — கலைஞர்
மலர் விழி மகளிர் நெஞ்சில் விளையும் ஊடலே பண்பார்ந்த நல்ல காதலர்க்கு அழகு சேர்க்கும்
Meaning (English)
An increased shyness in those whose eyes are like flowers is beautiful even to good and virtuous husbands.