Thirukkuralagam
Kural 1306 of 1330

துனியும் புலவியும் இல்லாயின் காமம் கனியும் கருக்காயும் அற்று.

Thuniyum Pulaviyum Illaayin Kaamam Kaniyum Karukkaayum Atru

Love without hatred is ripened fruit; Without some lesser strife, fruit immature

விளக்கம் — மு. வரதராசன்

பெரும் பிணக்கும் சிறு பிணக்கும் இல்லாவிட்டால், காமம் மிகப் பழுத்த பழமும் முற்றாத இளங்காயும் போல் பயன்படாததாகும்.

விளக்கம் — சாலமன் பாப்பையா

வளர்ந்த ஊடலாகிய துனியும், இளம் ஊடலாகிய புலவியும் இல்லாது போய்விட்டால், காதல் நிறைந்த இல்லறம், முதிர்ந்த பழமும் இளங்காயும் போல் ஆகிவிடும்.

விளக்கம் — கலைஞர்

பெரும்பிணக்கும், சிறுபிணக்கும் ஏற்பட்டு இன்பம் தரும் காதல் வாழ்க்கை அமையாவிட்டால் அது முற்றிப் பழுத்து அழுகிய பழம் போலவும், முற்றாத இளம் பிஞ்சைப் போலவும் பயனற்றதாகவே இருக்கும்

Meaning (English)

Sexual pleasure, without prolonged and short-lived dislike, is like too ripe, and unripe fruit.

Open the interactive app →