Thirukkuralagam
Kural 1308 of 1330

நோதல் எவன்மற்று நொந்தாரென்று அஃதறியும் காதலர் இல்லா வழி.

Nodhal Evanmatru Nondhaarendru Aqdhariyum Kaadhalar Illaa Vazhi

What good can grieving do, when none who loveAre there to know the grief thy soul endures

விளக்கம் — மு. வரதராசன்

நம்மால் இவர் வருந்தினார் என்று அந்த வருத்தத்தை அறிகின்ற காதலர் இல்லாதபோது, வருந்துவதால் பயன் என்ன?

விளக்கம் — சாலமன் பாப்பையா

இவர் நமக்காக வருந்தினார் என்று அவ் வருத்தத்தை அறியும் அன்பரைப் பெறாதபோது, ஒருவர் வருந்துவதால் என்ன பயன்?

விளக்கம் — கலைஞர்

நம்மை நினைத்தல்லவோ வருந்துகிறார் என்பதை உணர்ந்திடும் காதலர் இல்லாத போது வருந்துவதால் என்ன பயன்?

Meaning (English)

What avails sorrow when I am without a wife who can understand the cause of my sorrow?

Open the interactive app →