Kural 1309 of 1330
நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.
Neerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne Inidhu
Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love
விளக்கம் — மு. வரதராசன்
நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.
விளக்கம் — சாலமன் பாப்பையா
நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.
விளக்கம் — கலைஞர்
நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்
Meaning (English)
Like water in the shade, dislike is delicious only in those who love.