Thirukkuralagam
Kural 1309 of 1330

நீரும் நிழலது இனிதே புலவியும் வீழுநர் கண்ணே இனிது.

Neerum Nizhaladhu Inidhe Pulaviyum Veezhunar Kanne Inidhu

Water is pleasant in the cooling shade; So coolness for a time with those we love

விளக்கம் — மு. வரதராசன்

நீரும் நிழலை அடுத்திருப்பதே இனிமையானது; அதுபோல், ஊடலும் அன்பு செலுத்துவோரிடத்தில் கொள்வதே இன்பமானது.

விளக்கம் — சாலமன் பாப்பையா

நீரும்கூட வெயிலுக்குக் கீழ் இராமல் நிழலுக்குக் கீழ் இருப்பது இனிமை; ஊடலும் அன்புள்ளவரிடம் மட்டுமே இனிமை ஆனது.

விளக்கம் — கலைஞர்

நிழலுக்கு அருகில் உள்ள நீர்தான் குளிர்ந்து இனிமையாக இருக்கும்; அதுபோல அன்புள்ளவர்களிடம் கொள்ளும் ஊடல்தான் இன்பமானதாக இருக்கும்

Meaning (English)

Like water in the shade, dislike is delicious only in those who love.

Open the interactive app →