Thirukkuralagam
Kural 1310 of 1330

ஊடல் உணங்க விடுவாரோடு என்நெஞ்சம் கூடுவேம் என்பது அவா.

Ootal Unanga Vituvaarotu Ennenjam Kootuvem Enpadhu Avaa

Of her who leaves me thus in variance languishing,To think within my heart with love is fond desire

விளக்கம் — மு. வரதராசன்

ஊடல் கொண்ட‌போது உணர்த்தி மகிழ்விக்காமல் வாட விடுகின்றவரோடு என் நெஞ்சம் கூடியிருப்போம் என்று முயல்வதற்குக் காரணம் அதன் ஆசையே.

விளக்கம் — சாலமன் பாப்பையா

ஊடி, என் நெஞ்சை வாட விட்டிருப்பவனோடும் கூடுவோம் என்று என் நெஞ்சம் முயல்வதற்குக் காரணம் ஆசையே.

விளக்கம் — கலைஞர்

ஊடலைத் தணிக்காமல் வாடவிட்டு வேடிக்கை பார்ப்பவருடன் கூடியிருப்போம் என்று என் நெஞ்சம் துடிப்பதற்கு அதன் அடங்காத ஆசையே காரணம்

Meaning (English)

It is nothing but strong desire that makes her mind unite with me who can leave her to her own dislike.

Open the interactive app →